Archives: அக்டோபர் 2016

என்னுடைய சகோதர சகோதரிகள்

சில ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு கலிபோர்னியாவில் பொருளாதார நிலை சரியத் தொடங்கிய பொழுது, போதகர் பாப் ஜான்சன், அந்தக்கால கட்டத்திலிருந்த நெருக்கடியான சூழ்நிலைகளை மட்டும் பார்க்காமல் அவற்றின் ஊடாக இருந்த நல்ல வாய்ப்புகளையும் கண்டார். ஆகவே, அவர் அந்த நகரத்தின் மாநகரத் தந்தையைச் (mayor) சந்தித்து, “எங்களுடைய திருச்சபை உங்களுக்கு எந்த விதங்களில் உதவிசெய்ய இயலும்?” என்று கேட்டார். மாநகரத்தந்தை மிகவும் ஆச்சரியப்பட்டார். ஏனெனில், பொதுவாக மக்கள் அவரிடம் உதவிகேட்டுத்தான் வருவார்கள். இப்பொழுது ஒரு போதகர் அவருடைய திருச்சபை மக்கள் அனைவரோடும் கூட உதவிசெய்ய முன்வந்துள்ளார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மாநகரத்தந்தையும், போதகரும் இணைந்து அந்த நாட்களில் மிகவும் தேவையாக இருந்த காரியங்களை குறித்துப்பேசி அவற்றை எவ்வாறு சந்திக்கலாம் என்று திட்டமிட்டார்கள். அவர்களது ஊரில் மட்டும் 20,000 மூத்த குடிமக்களை அதற்க்கு முந்தின ஆண்டில் ஒரு பார்வையாளர்கூட சென்று பார்க்காத சூழ்நிலை இருந்தது. நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு, அவர்களை வளர்க்கத்தக்க குடும்பங்கள் தேவைப்பட்டன. மேலும் அநேக குழந்தைகள் படிப்பில் முன்னேற அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க ஆட்கள் தேவைப்பட்டது.

இந்தத் தேவைகளில் சிலவற்றை அதிக பணம் செலவழிக்காமல் சந்திக்க இயலும். ஆனால் அவை அனைத்திலும் ஈடுபடும் மக்கள் ஆர்வமுடையவர்களாகவும், அவர்களது நேரத்தை செலவழிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதைத்தான் திருச்சபை மக்கள் செய்யவேண்டியதிருந்தது.

எதிர்காலத்தைப்பற்றி இயேசு அவருடைய சீஷர்களிடம் கூறினபொழுது, அவரை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,… ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத். 25:34) என்று கூறுவேன் என்றார். அவர்களுக்கு அவர் அளிக்கும் மேற்கூறப்பட்ட வெகுமதிகளைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று இயேசு கூறினார். அப்பொழுது அவர் “சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத். 25:40) என்று அவர்களிடம் கூறுவார்.

நாம் நமது நேரத்தை, அன்பை, தேவன் நமக்கு அருளியுள்ள பொருட்களை தாராளமாக கொடுக்கும்பொழுது, தேவனுடைய ராஜ்யத்தின் காரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாறாத அன்பு

சமீபகாலத்தில் நான் மேற்கொண்ட விமானப் பயணத்தில் விமானம் தரை இறங்குவது சற்று கடினமாக இருந்ததினால், விமானம் ஓடுதளத்தில் ஓடினபொழுது, விமானத்திற்குள்ளிருந்த நாங்கள் அங்கும் இங்குமாக அலைக்கப்பட்டோம். சில பயணிகள் மிகவும் பயத்துடன் இருந்தார்கள். ஆனால் எனக்குப்பின் அமர்ந்திருந்த சிறுமிகள் “ஆம், நாம் மறுபடியும் முன்புபோல வலது இடதுபுறமாக அசைவோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினபொழுது அந்த பயம் நிறைந்த சூழ்நிலை மாறிவிட்டது.

பொதுவாக குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான செயல்களை ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடனும், எளிய திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். “சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” (மாற். 10:15) என்று இயேசு கூறினபொழுது, குழந்தைகளின் இத்தன்மையை மனதில் வைத்துதான் ஒருவேளை அவர் அப்படி கூறியிருக்கலாம்.

வாழ்க்கையில் சவால்களும், இருதயத்தை நொறுக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். “அழும் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் எரேமியா இதைக்குறித்து, நாம் அறிந்ததை விட அதிகமாக அறிந்திருந்தான். ஆனால் எரேமியாவின் கஷ்டங்கள் மத்தியில் “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது”(புலம். 3:22–23) என்ற ஓர் ஆச்சரியமான உண்மையை அவனிடம் கூறி தேவன் அவனை ஊக்குவித்தார்.

நம்முடைய வாழ்க்கையில், தேவனுடைய புதிய கிருபைகள் எந்த நேரத்திலும் அருளப்படலாம். அவருடைய கிருபை எப்பொழுதுமே உள்ளது. ஆனால், தேவன் ஒருவரால் மட்டுமே செய்யப்படக்கூடிய காரியங்களுக்காக, சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்புடன், விழிப்புடன் காத்திருக்கும்பொழுது மட்டுமே அவரது கிருபைகளை நம்மால் பார்க்க இயலும். நமது உடனடியான சூழ்நிலைகளை வைத்து தேவனுடைய நன்மைத் தன்மையை விளக்க இயலாது என்றும், வாழ்க்கையின் மிகக்கடினமான பகுதிகளை விட அவருடைய உண்மை பெரிதென்றும் எரேமியா அறிந்திருந்தான். இன்று, தேவனுடைய புதிய கிருபைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.

உங்களது பயணம்

1960ம் ஆண்டுகள் பொதுவாக ஒழுக்கநெறிகளை எதிர்க்கும் மனப்பான்மை உடைய காலமாக இருந்தது. நான் அந்தக்காலத்தில் வளர்ந்து வந்தபடியால், நானும் மதசம்பந்தமான காரியங்களை புறக்கணித்தேன். என் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், நான் 20 வயது கடந்த காலகட்டத்தில், ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த பின்புதான் விசுவாசத்திற்குள் வந்தேன். அப்பொழுதிலிருந்து எனது நடுத்தர வயதினை, மனிதராகிய நம்மிடம், இயேசு காண்பித்த அன்பினைப்பற்றி பிறருக்கு அறிவித்து வருவதில் செலவிட்டு வந்தேன். அது ஒரு பயணமாக இருந்து வருகிறது.

குறைபாடுகள் நிறைந்த இவ்வுலகில் வாழும் வாழ்க்கையை “பயணம்” என்ற சொல் குறிக்கிறது. பயணம் செய்யும்பொழுது வழியில், நாம், மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், சமவெளிகள், போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலைகள், ஆள் அரவமற்ற அமைதியான சாலைகள் - உயர்வுகள், தாழ்வுகள், மகிழ்ச்சிகள், துக்கங்கள், போராட்டங்கள், இழப்புகள், நொறுங்கின இருதயம், தனிமை ஆகியவைகளை சந்திக்கின்றோம். நமக்கு முன்னால் உள்ள பாதையை நம்மால் பார்க்க இயலாது. நாம் விரும்புகிறபடி அப்பாதை அமையாவிட்டாலும் அது இருக்கிறவண்ணமாகவே அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஒருபொழுதும் இப்பயணத்தை தனிமையாக சந்திப்பது இல்லை. தேவனுடைய பிரசன்னம் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பதை வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் இல்லாத இடமே கிடையாது (சங். 139:7-12). அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை (உபா. 31:6; எபி. 13:5). அவர் போனபின்பு பரிசுத்தாவியை அனுப்புவேன் என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு வாக்களித்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவா. 14:18) என்று கூறினார்.

நாம் நமது பயணத்தில் சந்திக்கும் சவால்களையும், வாய்ப்புகளையும் மன உறுதியோடு சந்திக்கலாம். ஏனெனில், நம்மை ஒருபொழுதும் கைவிடாமல், நம்மோடுகூட எப்பொழுதும் இருப்பேன் என்று தேவன் வாக்களித்துள்ளார்.

பாலைவனத் தனிமை

உட்டாவில் ஆர்ச்சஸ் தேசிய பூங்கா என்று அழைக்கப்படுகிற பகுதியில் கண்காணிப்பாளராக இருந்த எட்வர்ட் ஆபி என்பவர் கோடைக் காலத்தில் அப்பகுதியில் அவர் அனுபவித்த அனுபவங்களை பாலைவனத் தனிமை என்ற புத்தகமாக எழுதியுள்ளார். ஆபியின் உயர்ந்த எழுத்து நடைக்காகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்மேற்கு பகுதியைப்பற்றி அவர் தெளிவாக எழுதியுள்ள விவரங்களுக்காகவும் அந்தப் புத்தகம் வாசிப்பதற்கு தகுதியானது.

ஆனால், அனைத்து திறமைகள் அவரிடம் இருந்தாலும் ஆபி ஒரு நாஸ்திகன். அதனால் அவர் அப்பகுதியில் வெளிப்படையாகக் காணப்பட்ட அழகை மட்டும்தான் அவரால் காணமுடிந்தது. எவ்வளவு வருத்தமான காரியம்! அவர் கண்ட வெளிப்படையான அழகை மட்டும் வாழ்நாள் முழுவதும் புகழ்ந்து விட்டு அவை எல்லாவற்றிற்கும் மேலான காரியத்தை தவற விட்டுவிட்டான்.

பொதுவாக ஆதிகால மனிதர்களின் சிருஷ்டிப்பைப்பற்றிய கோட்பாடுகள், புராணக்கதைகள், கற்பனைக்கதைகள், பாடல் இவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால் சிருஷ்டிப்பைப் பற்றிய இஸ்ரவேல் மக்களின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது. நாம் சிறு குழந்தைகளைப்போல மகிழ்ச்சியடையவும், சந்தோஷப்படவும், அழகான சிருஷ்டிப்பை சிருஷ்டித்த தேவனைப்பற்றி அது கூறுகிறது. தேவன், இப்பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க எண்ணினார். வார்த்தையினால் அதை சிருஷ்டித்தார். பின்பு அது “அழகாக” இருக்கிறதென்று அவர் கூறினார். (எபிரேய மொழியில் நல்லது என்ற சொல் அழகு என்பதையும் குறிக்கிறது). பின்பு தேவன் பரதீஸை சிருஷ்டித்து, மனிதராகிய நம்மையும் உருவாக்கி, ஏதேன் தோட்டத்தில் வைத்து மகிழ்ச்சியுடன் “அனுபவியுங்கள்” என்று கூறினார்!

சிலர், அவர்களைச் சுற்றியுள்ள சிருஷ்டிகர் சிருஷ்டித்த சிருஷ்டிகளின் அழகை ரசித்து மகிழ்கிறார்கள். ஆனால், “அவரை தேவன் என்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலும் இருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்கள் இருதயம் இருளடைந்தது” (ரோம. 1:21).